tamilnadu

img

தியாகி சுப்பிரமணிய சிவா 94-ம் ஆண்டு நினைவுநாள்  நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் மரியாதை

 தருமபுரி, ஜூலை 23- தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரபட்டியில் அமைந்துள்ள விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபத்தில் அவரது 94 வது நினைவு நாளை யொட்டி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல், பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தியாகி சுப்பிரமணிய சிவா, பாரத மாத திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட பால் உற் பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி. ஆர்.அன்பழகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவ லர் மு.பாரதிதாசன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர்  மதியழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் தண்ட பாணி, பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ், பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவி யர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவாக்கு மரியாதை செலுத்தினார்கள்.

;