tamilnadu

தருமபுரியில் கொரோனாவிற்கு இருவர் பலி

தருமபுரி, ஜூலை 20 - தருமபுரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். பென்னாகரம் வட்டம் முள்ளுவாடி கிராமத்தைச் சேர்ந்த வர் குலாப்ஜான் (62). இவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஜூலை 14-ம் தேதி முதல் பென்னாகரம் அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் அதிகமாக இருந்து வந்த நிலையில், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலை யில் தீடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  மேலும், அதே கிராமத்தைச் சேர்ந்த அப்துல்ஜான் (68) என்பவருக்கும் கொரோனோ தொற்று உறுதியான நிலை யில், மூச்சுவிட சிரமப்பட்டபோது மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்தார். ஏற்கனவே தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் இருவர் உயிரி ழந்திருப்பது மாவட்ட மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது.

;