பென்னாகரம், மார்ச் 12- கொரோனா வைரஸ் பரவாமல் தவிர்க்க ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வருவதைத் தவிர்க்க வேண்டுமென தரும புரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி வேண்டுகோள் விடுத்துள்ளார். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறை சார்பில் ஒகேனக்கல்லில் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழி தலைமையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இதைத்தொடர்ந்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், ஒகேனக்கலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொரோனா வைரஸ் பரவு வதை தடுக்கும் நடவடிக்கையாக பரிசல் ஓட்டிகள், சமையல் கலைஞர்கள், மசாஜ் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட் டுள்ளது. ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு கர் நாடகா, கேரளா போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால், கொரோனா தொற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற காலங்களில் சுற்றுலா தளங்களுக்கு பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தவிர்ப்பது அவர்களுடைய உடல் ஆரோக் கியத்திற்கும் நல்லது. அப்பொழுதுதான் இந்த நோய் தொற்று முற்றிலுமாக தடுக் கவும் முடியும். எனவே ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள், சுற்றுலா வருவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மற்றும் குணப்படுத்துவதற்கு தேவை யான அனைத்து ஏற்பாடுகளையும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கொரோனா நோய் அறிகுறிகள் இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்கு மற்றும் அவர்களை தனிமைப்படுத்தி கண் காணித்து, சிகிச்சை அளிப்பதற்கும் 2- வார்டுகள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது. முட்டை, கோழி மூலம் பரவுவ தாக வரும் வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம், அச்சப்பட தேவையில்லை என அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் பூ.இரா.ஜெமினி, கோட்டாட்சியர் தேன்மொழி, பென்னா கரம் ஒன்றியகுழு தலைவர் கவிதா இராம கிருஷ்ணன், வட்டாட்சியர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.