tamilnadu

img

அரசு பள்ளி வளாகத்தில் திப்புசுல்தான் கால நாணயம் கண்டுபிடிப்பு

பென்னாகரம், பிப். 10- பென்னாகரம் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி காலத்தில் பயன்ப டுத்தப்பட்ட நாணயங்கள் கண்டுபிடிக் கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம்  அருகே    அலேபுறம்  கிராமத்தில்  அரசு  உயர்நிலைப்பள்ளி உள்ளது. பள் ளியைச் சுற்றி 5 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் அமைந்துள் ளது.  இந்த மைதானத்தில் பள்ளி மாண வர்களுக்கு   இரண்டு மாதத்தில் 37 செம்பு நாணயங்கள் கிடைத்துள்ளது. இது சம்மந்தமாக தருமபுரி அரசு கலைக் கல்லூரி வரலாற்றுப் பேராசி ரியர் சந்திரசேகர் தலைமையிலான குழு பள்ளி வளாகத்தை ஆய்வு செய்த னர். அப்பொழுது இரண்டு செம்பு நாணயங்கள் கிடைத்தது. இது குறித்து பேராசிரியர் சந்திரசே கர் கூறுகையில், முன்னூறு, நானூறு வருடங்களுக்கு முன்பு திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி காலங்களில் நாணயம் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் வணிகம் சார்ந்த இடமாக இந்த இடம்  இருந்திருக்க வேண்டும்.  இங்கு நாணயம்  தயாரித்ததற்கான அடையா ளமாக ஏராளமாக செம்பு துகள்கள் இந்த வளாகத்தில் நிறைந்து காணப்ப டுகிறது.  இங்கு  கிடைக்கப்பட்ட நாணயங்களில் உருது மொழி பொறிக் கப்பட்ட நாணயம்,  சிற்றரசர்களின் அடையாளச் சின்னங்களான பல் வேறு உருவம் பொறிக்கப்பட்ட நாண யங்கள் உள்ளன. வரலாற்று மற்றும் கலாச்சாரம் பண்பாடு தெரிந்த மாண வர்களை கொண்டு இவ்விடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டால் பல் வேறு புதிய புதிய வரலாற்றுத் தகவல் கள் கிடைக்கும் என அவர் கூறினார்.  மேலும், இந்தப் பள்ளி அருகே 1509 ஆம் ஆண்டு விஜயநகர் பேரர சர் கிருஷ்ண தேவராயரால் கட்டப் பட்ட லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.