tamilnadu

img

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பென்னாகரம், டிச,24- காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக ரித்துள்ளது.  கர்நாடக, தமிழக காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 மாதங் களுக்கு முன்பு கனமழை பெய்த தால் தருமபுரி மாவட்டம் ,ஒகேனக் கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.  இதனால் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டதாலும், மெயின் அருவி யில் இரும்பு தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததாலும் அருவியில் குளிக்க மாவட்ட நிர் வாகம் தடை விதித்தது. இந்நிலை யில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப் படியாக குறைந்தது.  இந்நிலையில் ஒகேனக் கல்லுக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து  500 கனஅடி தண்ணீர் வந்து  கொண்டு இருந்தது. திங்களன்று  வினாடிக்கு 4 ஆயிரத்து 300 கன  அடியாக குறைந்தது. இதைத் தொடர்ந்துசுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து வருகிறது.  இதனிடையே கர்நாடக, கேரளா  மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து ஏராளமான  சுற்றுலா பயணிகள் ஒகேனக் கல்லில் குவிந்தனர். அவர்கள் காவிரி கரையோரம் குளித்தனர்.  பாதுகாப்பு உடை அணிந்து சுற்றுலா பயணிகள் கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து மெயின் அருவி, ஐந்தருவி வழியாக மணல்  திட்டு வரை உற்சாகமாக பரிசலில்  சென்று மகிழ்ந்தனர். மேலும்  தொங்கு பாலம், மீன் அருங்காட்சி யகம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட  பகுதிகளில் கூட்டம் அலை மோதியது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் போலீசார் காவிரி கரையோரம், களில் தீவிர ரோந்து சென்று கண் காணித்தனர். முன்னதாக, வெள்ளப்பெருக் கின் காரணமாக மெயின் அருவி பகுதியில் இரும்பு தடுப்பு கம்பிகள் உடைந்து சேதமடைந்தது. இத னால் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.  இந்த தடை உத்தரவு 3 மாதத்திற்கும்  மேலாக தொடர்ந்து நீடிக்கிறது.  ஆகவே,அருவி பகுதியில் சீரமைப்பு  பணிகளை விரைந்து  முடித்து அருவியில் குளிக்க அனுமதி  வழங்க வேண்டும் என சுற்றுலா  பயணிகள்  தெரிவித்தனர்.

;