tamilnadu

பாதுகாப்பான குடிநீர் கேட்ட பொதுமக்கள் ஆற்று தண்ணியை குடிக்க சொன்ன மாவட்ட ஆட்சியர்

பென்னாகரம், ஆக.12- ஒகேனக்கல் அருகேயுள்ள தளவு கொட்டாய் பொது மக்கள் பாதுகாப்பான குடிநீர் கேட்டதற்கு, ஆற்று தண்ணியை குடித்துக் கொள்ளுங்கள் என கூறிய மாவட்ட ஆட்சியரின் பதிலால், பொது மக்கள் வேதனையடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள தளவு  கொட்டாய் பகுதியில் சுமார் 20 க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை வெகுவாக உள்ளது. அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் அமைத்துள்ள அடிபம்பும் பழு தடைந்துள்ளது. மேலும் ஒகேனக்கல் கூட்டு  குடிநீர் திட்டத்தின் குடிநீரும் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் அப் பகுதி பொதுமக்கள் குடிநீருக்கு பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி யில் அதிகளவில் தண்ணீர் வருவதை ஆய்வு செய்வதற்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி சென் றுள்ளார். அப்போது அப்பகுதி பொது மக்கள் தங்களுக்குள்ள குடிநீர் பிரச்ச னையை மாவட்ட ஆட்சியர் மலர்விழியிடம் கூறியுள்ளனர். அதற்கு மாவட்ட ஆட்சியர்,  ஆற்றில்தான் இவ்வளவு தண்ணீர் செல் கிறது. அதை நீங்கள் குடித்துக் கொள்ள வேண்டியதுதானே என கூறியுள்ளார். இப் பதிலால் பொதுமக்கள் கடும் மன உளைச் சலுக்கு உள்ளானார்கள். இதையடுத்து அப் பகுதி பொதுமக்கள், நீங்கள் முதலில் இந்த ஆற்று தண்ணீரை குடியுங்கள், பின்னர்  நாங்கள் குடிக்கிறோம் என மாவட்ட ஆட்சியரிடம் கூறினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து குடிநீர் வழங்கு வதற்கான ஏற்பாடு செய்யப்படும் என கூறிய மாவட்ட ஆட்சியர் உடனடி யாக அங்கிருந்து சென்று விட்டார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள்  கூறுகையில், குடிநீர் பற்றாக்குறை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட உதவி ஆட்சியர் ஆகியோ ரிடம் கேட்டதற்கு, ஆற்றுத் தண்ணீரை குடித்துக் கொள்ளுங்கள் என அலட்சிய மாக கூறுகின்றனர். இந்த தண்ணீரை சுத்திகரிக்காமல் குடித்தால் தலைவலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகள் ஏற்படுகிறது. இதனால் தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர்கள் அலட்சிய மாக பதில் கூறுகின்றனர் என்று வேதனை யோடு தெரிவித்தனர்.