தருமபுரி, ஜூன் 29- கிருஷ்ணகிரி கே.ஆர்.பி நீர்த்தேக்கத்தில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போதிய அளவில் மழை இல்லை. தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைப்போல தென்பெண்ணையாறு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு தீவனமும் இல்லை. இந்நிலையில், தற்சமயம் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி நீர்த்தேக்கத்தில் சுமார் 50 சதவிகித தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே, குடிநீருக்குப் பயன்படும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்த விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இருமத்தூர், அனு மன்தீர்த்தம் மற்றும் டி.அம்மாப்பேட்டை பகுதி விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.