தருமபுரி, ஆக.12- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 3ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 15 ந் தேதி முதல் 17 ந் தேதி வரை தஞ்சாவூரில் நடைபெற உள்ளது. இதையொட்டி, தரும புரி மாவட்டம் முழுவதும் பிரச் சாரம் மற்றும் கருத்தரங்கம் நடை பெற்றது. தருமபுரி அம்பேத்கர் கல்வி அறக் கட்டளையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கருத்தரங்கம் திங்களன்று நடைபெற்றது. இக் கருத்தரங்கில் சாதியம் தகர்ப் போம் எனும் தலைப்பில் முனைவர் காளீஸ்வரன் பேசியதாவது, சாதியம் அனைத்து பகுதி மக்க ளிடையே வேற்றுமைகளை உரு வாக்கி, வாழ்வாதார பிரச்சனை களை பின்னுக்குத்தள்ளிவிடுகிறது. இதனால் ஒரு சமூகத்தை மற்ற சமூகத்துடன் மோதவிட்டு இரத்தம் குடிக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர் அம்பேத்கர். தலித் மக்கள் கல்வியிலும், பொரு ளாதாரத்திலும் முன்னேற வேண் டும். வர்ணாசிரமத்தையும், சாதிய ஒடுக்குமுறை எதிர்த்து வாழ்நாள் முழுவதும் போராட்டம் நடத்தி னார். அவருடைய கனவை நினை வாக்கும் வகையில், சாதியற்ற சமூகத்தை உருவாக்க மாணவர் சமூகம் பாடுபடவேண்டும். தீண் டாமை வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டவேண்டும். இழிவு களை செய்யும் நாசகார சாதி யத்தை வேரறுப்போம். சமத் துவம், சமூகநீதி, பகுத்தறிவு கொள் கைகளை வலிமையாக முன் னேடுக்க வேண்டும் என தெரிவித் தார். இந்நிகழ்ச்சிக்கு அம்பேத்கர் அறக்கட்டளை நிர்வாகி ஆர்.கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் டி.எஸ்.ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் டி. மாதையன், தம்ழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலக்குழு உறுப் பினர் நாகைபாலு, அம்பேத்கர் அறக்கட்டளை நிர்வாகிகள் சங்கர், தன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.