tamilnadu

img

கம்பைநல்லூரில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

தருமபுரி, மே 19 - கம்பைநல்லூர் பேரூ ராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை தருமபுரி மாவட்ட பேரூ ராட்சி உதவி இயக்குநர் ஜீஜாபாய் ஆய்வு மேற் கொண்டார். தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பேரூராட் சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை, தார் சாலை அமைக்கும் பணிகள், கழிவு நீர் கால்வாய்கள் அமைத்தல் மற்றும் சுகாதார மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டப் பணிகளை உதவி இயக்குநர் ஜீஜாபாய் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து கோல்டன் தெரு, அம்பேத்கர் தெரு மற்றும் ஏரிக்கோடி தெரு உள்ளிட்ட இடங்களில் சீரான குடிநீர் விநியோகம், மின் விளக்குகள் மற்றும் தூய்மைப் பணி கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது செயல் அலுவலர் மா. ராஜா ஆறுமுகம், பணியாளர்கள் ராஜ் குமார், கண்ணன், கோவிந்தன் மற்றும் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந் தனர்.

;