tamilnadu

img

சாதியைச் சொல்லி இழிவாக பேசும் கணவர் மீது நடவடிக்கை கோரி பெண் புகார்

தருமபுரி, ஜூலை 27- திருமணமான குறவர் இனப் பெண்ணை, சாதிப் பெயரைச் சொல்லி இழி வாக பேசி கொலைமிரட்டல் விடுத்த கண வர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் முறை யிட்டுள்ளார்.  தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் கருங்கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த் தப்பட்ட குறவர் இனத்தைச் சேர்ந்தவர் ஞானசௌந்தரி (23). இவருக்கும், கூக் கூடப்பட்டி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சின்னராஜ் மகன் வேடிப்பன் (30) என்பவருக்கும் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத் திற்க்கு பிறகு கணவர் வீட்டில் ஞானசௌந் தரி வாழ்ந்து வந்த நிலையில், கணவர் மற்றும் மாமியார் நாகம்மாள் ஆகியோர் அவரை தொடர்ந்து சாதியைச் சொல்லி திட்டியும், கொலை மிரட்டலும் விடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஞானசௌந்தரி புகார் அளித்தும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலை யில், தன்னை முறைப்படி விவாகரத்து செய் யாமல் இரண்டாவது திருமணம் செய்த தனது கணவர் மீதும், கொலை மிரட்டல் விடுத்த அவரது குடும்பத்தார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சி யர் எஸ்.மலர்விழியிடம் முறையிட்டுள்ளார்.

;