தருமபுரி, மே 22தருமபுரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டி காமராஜ் நகரைச் சேரந்த 14 வயதுசிறுமி, அதேபகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அதே பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் என்பவர் பள்ளிக்கு செல்லும் போது மாணவியை கேலிசெய்வதோடு ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து மாணவி தருமபுரி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இந்நிலையில் செவ்வாயன்று மாணவியின்வீட்டிற்கு சென்ற சாந்தகுமார் மாணவியைபாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது மாணவி சத்தம் போட அக்கம் பக்கத்தினர் வந்ததால் சாந்தகுமார் தப்பிசென்றார். இச்சம்பவம் குறித்து மாணவி தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் சாந்தகுமார் மீது போக்ஸோ சட்டத்தின் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.