tamilnadu

img

பொன்னமராவதியில் கருத்தரங்கம்

 பொன்னமராவதி, ஜூலை 21- பொன்னமராவதி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரெட்டமலையார்- காமராசர் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் மலை.தேவேந்திரன் தலைமையில் நடை பெற்றது. பாலசுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்தி னார். பொன்.தமிழரசன் மலை.செந்தில்குமார், தே.கனிய முதன், உதயம் சிவா, ச.ரமேஷ், பொன்.சேதுராமன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இரட்டைமலையார்-காம ராசர் உருவப்படத்தை சின்னுபழகு, மலைச்சாமி ஆகி யோர் திறந்து வைத்தனர்.  மாவட்ட துணைச் செயலாளர் சி.திலீபன் ராஜா, மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாநில துணைச் செயலாளர் பி.சதாசிவம், திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெ.ஆசைத் தம்பி, வழக்கறிஞர் பூவை.அரசு, சிபிஎம் ஒன்றிய செய லாளர் என்.பக்ருதீன், சிபிஐ மாவட்ட துணைச் செய லாளர் ஏனாதி ராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். “எழுச்சித் தமிழரின் பார்வையில் தலைவர்கள்” என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் கலைமுரசு பேசினார். புதுச்சேரி மாநில பொறுப்பாளர் புதியவன், மாநில பொறுப்பாளர் தமிழினி ஆகியோர் பேசினர்.