தருமபுரி, ஜன. 22- தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வடக்கு தெரு கொட்டாய் பகுதியை சேர்ந்த மாது மகன் அருளேஸ்வரன் (15). இவர், அதே பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந் தார். மேலும் பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்துள்ளார். இதனால், அருளேஸ்வர வனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இத னால் கடந்த அக். 10ஆம் தேதியன்று பெற் றோரிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரின் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை. இந்நிலையில், இதுதொடர்பாக பெற்றோர் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகா ரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்ற னர்.