tamilnadu

img

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, மார்ச் 3- குற்ற குறிப்பானையை ரத்துசெய்யக் கோரி தமிழ் நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது அலு வலர்கள் மீது போடப்பட்டுள்ள 17-பி குற்ற குறிப் பானையை ரத்துசெய்யவேண்டும்.உரிய காலத்தில் பதவி உயர்வு,பணிஓய்வும் வழங்கவேண்டும்.மாவட்ட பணிமாறுதல் என்ற பெயரில் மன உளைச் சளை ஏற்படுத்தி பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும்.புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தருமபுரி பிடிஓ அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீலமேகம் தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகிகள் வடிவேல், மனோ கரன்,முத்தையன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதேபோல், நல்லம்பள்ளி பிடிஓ அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளி நாதன். வட்டச் செயலாளர் சந்திரன், ஊரக வளர்ச்சி துறை மாவட்ட இணைசெயலாளர் முருகன் ஆகி யோர் பேசினர்.
சேலம்
 சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் திருநா வுக்கரசு பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க நிர்வாகி வடிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜான் ஆஸ்டின் பங்கேற்றார். வீரபாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜக ணேஷ் தலைமையில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாநில செயற்குழு உறுப் பினர் கேசவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் 20 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.