tamilnadu

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.72 கோடியே 23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - மாவட்ட ஆட்சியர் தகவல்

தருமபுரி, மார்ச் 15- தருமபுரி மாவட்டத்தில் மாற் றுத்திறனாளிகள் நலத்துறை சார் பில்  கடந்த 8 ஆண்டுகளில் 10,542 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.72 கோடியே 23 லட்சம் மதிப்பி லான நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சி யர் எஸ்.மலர்விழி தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சி யர் தெரிவித்துள்ளதாவது, தரும புரி  மாவட்டத்தில் பிப்.29ஆம் தேதி வரை 34,688 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங் கப்பட்டுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2020-ஆம் ஆண்டு வரை மனவளர்ச்சி குன்றி யோருக்கான பராமரிப்பு உதவித் தொகை, கடுமையாக பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனாளிகளுக் கான பராமரிப்பு உதவித்தொகை, தசை சிதைவு நோயால் பாதிக்கப் பட்டோருக்கான பராமரிப்பு உத வித் தொகை. தொழு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராம ரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் 4990 பயனாளிகளுக்கு ரூ.77,59, 74,000 வழங்கப்பட்டுள்ளது.   சுயதொழில் புரியும் மாற்றுத்தி றனாளிகளுக்கு வங்கி கடன் மானி யம் வழங்கும் திட்டத்தின் கீழ் 427 நபர்களுக்கு ரூ.43.74,900 வங்கிக் கடன் மானியம் வழங்கப்பட்டுள் ளது. மாற்றுத்திறனாளிகளுக் கான திருமண நிதியுதவி வழங் கும் திட்டத்தின் கீழ் 117 நபர்க ளுக்கு ரூ.35,50,000 மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப் பட்டுள்ளது.  மேலும், மாற்றுத்திறனாளிக ளுக்கான நல வாரியம் மூலம் 147 நபர்களுக்கு ரூ.28,14,500 உதவி கள் வழங்கப்பட்டுள்ளது. இணைப்பு சக்கரம் பொருத்தப் பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 378 நபர்களுக்கு மூன்று சக்கர சைக் கிள் 224 நபர்களுக்கு ரூ.11,64, 890- மதிப்பிலும், பார்வையற்றோ ருக்கான கைகடிகாரம் 210 நபர் களுக்கு ரூ.2,26,200 மதிப்பிலும்,  செயற்கை கால் மற்றும் கை 62 நபர்களுக்கு 22,82,000 மதிப்பி லும், கல்வி உதவித்தொகை வழங் கும் திட்டத்தின் கீழ் 4784 நபர்க ளுக்கு ரூ.1,25,46,000 மதிப்பி லும் என மொத்தம் 10,542 பய னாளிகளுக்கு  ரூ.72 கோடியே 23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.  மேலும், மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தி வரும் திட்டங்களில் பயன்பெற மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள  மாற்றுத்திற னாளிகள் அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெற வேண் டும்  என மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்தார்.