தருமபுரி, ஜூலை 20- தருமபுரி சோகத்தூர் ஏரியில் ரூ.44 லட்சம் மதிப் பீட்டில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருவதை பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சென்னை மண்டல தலைமை பொறியாளர் பி.ஜெயராம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து மண்டல தலைமை பொறியாளர் பி.ஜெயராம் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தருமபுரி மாவட்டத்திலுள்ள 21 ஏரிகள், குளங்களில் 2016-17 ஆம் ஆண்டு ரூ.158 லட்சம் செலவில் குடிமரா மத்து பணிகள் செய்யப்பட்டுள்ளது. 2017-18 ஆம் ஆண்டு 10 ஏரிகள் ரூ.327.65 லட்சம் செலவில் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடப் பாண்டில் ரூ.4.97 கோடிமதிப்பில் 10 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அன்னசாகரம் ஏரி ரூ.70 லட்சம், சோகத்தூர் ஏரி ரூ.44 லட்சம், கொளகத்தூர் சோழராயன் ஏரி ரூ.47.50 லட்சம், கொளநாச்சியம்மன் ஏரி ரூ.36.70 லட்சம், காரிமங்கலம் வட்டத்திற்குட்பட்ட சிக்கதிம்மனஅள்ளி ஏரி ரூ.41 லட்சம், நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட அதியமான்கோட்டை ஏரி ரூ.48 லட்சம், பாலவாடி ஏரி ரூ.55.50 லட்சம், பாலக் கோடு வட்டத்திற்குட்பட்ட பனங்கள்ளி ஏரி ரூ.54.50 லட்சம், புலிக்கல் ஏரி ரூ.50 லட்சம், செங்கன்பசுவந்தலாவ் ஏரி ரூ.49.80 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 10 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள ரூ.4.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாசன விவசாயி சங்கங்கள் 10 சதவிகிதம் பங்களிப் புடன் பணம், பொருள்அல்லது உடல் உழைப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பங்களிப்பாக அளிப்பார்கள். ஏரியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், ஏரியை தூர்வாரி கரையினை பலப்படுத் துதல், வாய்க்கால், உபரி நீர்வழியினை சீரமைத்தல் மதகுகள், கண்மாய்கள், கலிங்கினை சீரமைத்தல், பாசன வாய்க்காலை மேம்படுத்துதல் மற்றும் புரனமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் வழங்கப்படும். எனவே விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் தேவைப்படுமாயின் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் ஆகியோரை அணுகி பயன்பெறலாம். குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஏரிகளின் அருகே உள்ள கிணறுகள், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் கே.மெய்யழகன், உதவி செயற்பொறியாளர் எஸ்.லெனின் பிரான்சிஸ், உதவி பொறியாளர்கள் சாம்ராஜ், மோகனபிரியா, வெங்க டேஷ் மற்றும் பாசன சங்க விவசாயிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.