தருமபுரி, மே 10- அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தியதை கண் டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தழிழகம் முழுவதும் அரசு ஊழியர் களின் ஓய்வு வயதை 59-ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு வெளியிட்டி ருக்கிறது. பல லட்சம் இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் ஓய்வு வயதை 59 ஆக உயர்த்துவதால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும். எனவே, தமிழக அரசு இந்த அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இஎல் சரண் டர் தொகை நிறுத்திவைப்பு, ஜிபிஎப் வட்டி குறைப்பு ஆகியவற்றை தமிழக அரசு கைவிடவேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டி பட்டி வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்ட பொரு ளாளர் முனிராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கந்தின் மாவட்ட துணைத்தலைவர் அண்ணா குபேரன், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் வட்டதலைவர் செங்கோட்டையன், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றினைப் பின் மாவட்ட பொருளாளர் வெங்க டேசன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். நிறைவாக அசாருதின் நன்றி கூறினார்.
சேலம்
சேலம் மாவட்டம், மேற்கு கிளை சார்பில் சேலம் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் செல்வம், ஊரக வளர்ச் சித்துறை அலுவலர் சங்க நிர்வாகி வடி வேல் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். இதேபோல், வீரபாண்டி கிளை யில் மாவட்ட துணைத்தலைவர் திரு வேரங்கன் தலைமையிலும், கொங்க ணாபுரம் பகுதியில் வட்ட கிளை செயலாளர் பிரபாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எ ண்ணற்ற அரசு ஊழியர்கள் பங்கேற் றனர்.
திருப்பூர்
உடுமலைப்பேட்டை வட்டக் கிளை சார்பில் நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் வட்டச் செயலாளர் வெங்கிடுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதேபோல் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் செல்வக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அரசு தொழிற்பயிற்சி நிலை யத்தில் வட்ட இணைச் செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. பொதுப் பணித் துறை அலுவலகம் முன்பு வட்ட இணைச் செயலாளர் தா. வைரமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளானோர் கலந்து கொண்டனர்.