tamilnadu

img

மக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

தருமபுரி, நவ.14- தருமபுரியை அடுத்த பிடம னேரியில் தெருநாய்கள் அதி கரித்து காணப்படுவதுடன், அவை களால் தொல்லை ஏற்படுவதால், தெருநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தருமபுரி நகரத்தில் தற்போது நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி  திரிகிறது. குறிப்பாக தருமபுரி பிடமனேரி பகுதியில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இந் நிலையில் அப்பகுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் தனி யாக வருபவர்கள் மற்றும் இரு  சக்கர வாகனங்களில் செல்லக் கூடிய சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை இந்த நாய்கள் துரத்தி செல்கின்றன. சில சமயங்களில் கடித்தும் விடுகின்றன.  இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், தெருநாய் கள் வாகனங்களில் செல்லுபவர் கள் மட்டுமின்றி நடந்து செல்லு பவர்களையும் துரத்துகின்றது. இதில் அச்சமடையும் வாகன ஓட்டிகள், வாகனத்தை அதிக வேக மாக ஓட்டுவதால் விபத்து ஏற்படு கின்றது. மேலும் நாய் கடித்தால் ரேபீஸ் நோய் ஏற்படும் என அச்சம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரி வித்தனர். மேலும், இந்த நாய்கள்  பெரும்பாலான நேரங்கள் நக ராட்சி வைத்துள்ள குப்பை தொட்டி பகுதியிலே உள்ளன. இந்த குப்பை தொட்டியில் இறைச்சி கழிவுகள், உணவு கழிவு களை உண்பதற்காகவே வரு கின்றது. எனவே, நகராட்சி நிர் வாகம் சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன், தெருநாய் களில் இன பெருக்கத்தை கட்டுப் படுத்துவதுடன்,தெருநாய் களுக்கு ரேபீஸ் தடுப்பு ஊசி போட  நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.