தருமபுரி, மார்ச் 9- பாலக்கோட்டில் செயல்பட்டு வரும் தக்காளி மார்க்கெட்டில் உள்ள கழிப்பறையை சீரமைக்க வேண்டும் என தக்காளி வியாபாரி கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு தக்காளி மார்க்கெட்டில் பொது கழிவறை ஒன்று செயல் பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் டுக்கு தினந்தோறும் சுற்றுவட்டா ரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்க ணக்கான விவசாயிகள், தாங்கள் விளைவித்த தக்காளியை விற்ப னைக்கு கொண்டு வருகின்றனர். மேலும், உள்ளூர் வியாபாரிகள் வெளியூரிலிருந்து வரும் வியாபா ரிகள் பகல், இரவு பகலாக காத்தி ருந்து தக்காளியை வாங்கிச் செல்லு கின்றனர். இவர்கள் பயன்பாட்டிற் காக பாலக்கோடு பேரூராட்சி நிர் வாகம் புதிய கழிவறையை கட்டி செயல்படுத்தி வருகிறது. இந்த கழி வறையானது, தற்போது பராம ரிப்பு இல்லாமல் உள்ளது. மேலும், கழிவறையிலிருந்து வெளியேறும் சாக்கடை நீர் குழாய் உடைப்பு ஏற் பட்டு அசுத்த நீர் மாக்கெட்டிலேயே பல நாட்களாக தேங்கி நிற்கிறது. இந்த கழிவு நீரால் நோய் பரவும் அபா யம் ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவறைக்கு செல்லும் போது துர்நாற்றம் வீசுவதால் விவ சாயிகள் மற்றும் வியாபாரிகள் முகம் சுளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள் ளது.மேலும், கழிவறைப் பகுதியில் மதுபாட்டில்கள், சிகரெட் துண்டு கள், புகையிலை பொருட்கள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுவ தோடு மட்டுமின்றி, சுகாதார சீர் கேடு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை பேரூராட்சி நிர் வாகத்திற்க்கு புகார் அளித்தும் மெத்தன போக்கை கடைபிடித்து வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுகழிவறையை தினந்தோறும் சுத்தம் செய்து, பழு தான கழிவுநீர் குழாயினை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்தி யுள்ளனர்.