தருமபுரி, ஆக. 16- பென்னாகரம் அருகே செல்லமுடி கிராமத்தில் குடி நீர் விநியோகம் செய்து தரக்கோரி அப்பகுதி பொது மக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்திற்குட் பட்ட செல்லமுடி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற் பட்ட குடுபம்பத்தினர் வசித்து வருகின்றனர். இந் நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இக்கிரா மத்தில் போதிய குடிநீர் கிடைக்காததால் அப்பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். தற்போது புதிய தாக ஆழ்துளை கிணறு அமைக்க ஊராட்சி நிர்வா கம் ஏற்பாடு செய்தது.'
ஆனால், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், தனது நிலத்திற்கு அருகாமையில் ஆழ்துளை கிணறு அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இத னால், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி கிடப் பில் போடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சிய டைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த ஏரியூர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடு பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்தையில் ஈடுபட்ட னர். இதில், ஆழ்துளை கிணறு அமைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதி யளித்தன் அடிப்படையில் பொதுமக்கள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.