tamilnadu

img

மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்கிடுக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மனு

 தருமபுரி, மே 19- கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலி யர்கள் மற்றும் பணியாளர்க ளுக்கு பாதுகாப்பு உபகரணங் களை வழங்கிடக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தரும புரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழியிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன், மாவட்ட செயலாளர் ஏ.சேகர்  ஆகியோர் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி அரசு மருத்துவமனை யில் செவிலியர்களாக பணியாற்றி  வந்த குமுதா, பாலாமணி ஆகி யோர் மே15 ஆம் தேதியன்று வாகனத்தில் வீட்டிற்கு சென்ற போது விபத்து ஏற்பட்டது. இதில் குமுதா சம்பவ இடத்தி லேயே பலியானார்.பாலா மணி பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வா கத்தின் அலட்சியத்தை கண்டித் தும், அங்கு பணியாற்றும் செவிலி யர்கள் தங்குவதற்கு போதிய அடிப்படை வசதிகளை செய்திடக் கோரியும் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த  உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாவட்ட ஆட் சியர் எஸ்.மலர்விழி, கோட்டாட் சியர் உள்ளிட்ட மருத்துவ அலு வலர்கள் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் கலைந்து சென்றனர்.  ஆனால், இதுவரை அதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. மேலும், பல்வேறு மருத்துவ மனைகளில், மருத்துவ பணியா ளர்களுக்கு போதுமான வசதியும், பாதுகாப்பும் இல்லாததே தொடர் கதையாகி வருவது வருத்தம ளிக்கிறது.

எனவே, கொரோனா தடுப்பு பணியில் தன் உயிரையே துச்சமாக மதித்து  மக்கள் உயிர் காக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர் களுக்கு என்-95 முக கவசம் உள் ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அனைவருக்கும் வழங்கிட வேண் டும். விபத்தில் இறந்த செவிலி யர் குமுதா குடும்பத்திற்கு நிவா ரணமாக ரூ.50 லட்சம் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு  தகுதியின் அடிப்படையில்  அரசுப் பணி வழங்கவேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.