தருமபுரி, டிச. 2- தருமபுரி அருகேயுள்ள கோவி லூரான் கொட்டாயில் டோல்கேட் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்டம், அதிய மான் கோட்டையில் இருந்து ஓசூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட் டத்திற்கான நிலம் கையகப்ப டுத்தும் பணி துவங்கியுள்ளது. இந்த நான்கு வழிச்சாலை பாலக்கோடு வட்டம், கோவிலூரான்கொட்டாய் கிராமம் வழியாக செல்கிறது. இங்கு சுங்கச்சாவடி அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதனை அறிந்த கோவிலூரான்கொட்டாய் பகு தியை சேர்ந்த மக்கள் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், கோவிலூரான்கொட் டாய் கிராமத்தில் தலித் மற்றும் மிக வும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும் பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றோம். இங்கு சில குறு விவ சாயிகளும் உள்ளனர். மேலும், பாக்குமட்டை தயாரிக்கும் சிறு தொழிற்சாலையும், அருந்ததிய மக்கள் வசிக்கும் பகுதியில் பழமை வாய்ந்த கோவிலும் உள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த இடத்தில் நான்கு வழிச்சாலை அமைத்து சுங் கச்சாவடி அமைப்பதால் கிராம மக்கள் பாதிக்கப்படுவோம். எனவே, சுங்கச்சாவடி அமைப்பதை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி கோவிலூரான்கொட்டாய் மக்கள் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தி ருந்தனர். ஆனால், உள்ளாட்சி தேர் தல் அறிவிப்பால் மாவட்ட ஆட்சி யரை சந்திக்க முடியவில்லை. இத னையடுத்து மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பெட்டியில் போட்டுச் சென்றனர்.