தருமபுரி, ஆக.19- விளை நிலங்களில் பெட்ரோ லியக் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி மாவட் டத்தின் பல பகுதிகளில் பாதிக் கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப் பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவன கொந்தி வரை விளைநிலங்களில் பெட்ரோலியக் குழாய் பதிப்பதற் கான திட்டத்தை பாரதிய பெட் ரோல் நிறுவனத்தின் மூலம் மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள கோவை, திருப்பூர், நாமக் கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என ஏழு மாவட் டங்களில் ஆயிரக்கணக்கான ஏக் கர் விளைநிலங்கள் அரசால் கைய கப்படுத்த முடிவு செய்துள்ளது.
இதற்காக ஆங்காங்கே உள்ள விளை நிலங்களின் உரிமையா ளர்களை அழைத்துப் பேசுவது மற்றும் நிலத்தை அளவீடு செய் வது போன்ற பணிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனைக் கண்டித்தும், பெட் ரோலியக் குழாயை விவசாய நிலையங்களில் செயல்படுத் தாமல் சாலை மார்க்கமாகக் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பினர் சார்பில் தருமபுரியில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தருமபுரி மாவட் டம், பென்னாகரம், நல்லம்பள்ளி, நடப்பனஅள்ளி, குப்புசெட்டி பட்டி, தளவாய்அள்ளி, மாக்கனூர், ஓஜி.அள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட் டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பி.டில்லி பாபு, மாவட்ட தலைவர் கே.மலை யன், மாவட்ட செயலாளர் அர்ஜு னன், மாவட்ட துணைத்தலைவர் கே.அன்பு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் சின்ன சாமி மற்றும் திரளான விவசாயி கள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங் களை எழுப்பினர்.