தருமபுரி, ஜூலை 30- அன்னசாகரம் பகுதியில் நீண்ட காலம் வீடுகட்டி குடியிருந்து வருபவர்களுக்கு பட்டாவும், வீடு இல்லாதவர்களுக்கு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. தருமபுரி நகராட்சிக்குட்பட்டது 32,33 ஆவது வார்டு அன்னசாகரம் வேடியப்பன் திட்டு, ஏ.கொல்ல அள்ளிரோடு பகுதியில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும் பத்தார் புறம்போக்கு நிலத்தில் நீண்ட ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வரு கின்றனர். இவர்களுக்கு மனைபட்டா வழங்க வேண்டும். மேலும் பலர் சொந்த வீடு இல்லாமல் சிறு வீடுகளில் பல குடும்பங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். வறுமைகோட்டின் கீழ் வாழும் இக்குடும்பங்களுக்கு இலவச மனைபட்டா வழங்க வேண்டும் என வலி யுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சிஐடியு விசைத்தறி சம்மேளனத்தின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர். இம்மனுவினை அளிக்கையில் சிஐடியு விசைத்தறி சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் வி.பி.சாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தார்.