தருமபுரி, ஜூன் 7- பாலக்கோடு பேரூராட்சியில் பாதியில் நிறுத்தப் பட்ட பாதாளசாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி யில் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப கடந்த ஆண்டு ரூ.1கோடி மதிப்பில் பாதாளசாக்கடை திட் டம் துவக்கப்பட்டது. இத்திட்டம் துவங்கப்பட்டு சில நாட்களிலேயே கிடப்பில் போடப்பட்டது. இதனால் சரியான குழாய் அமைப்பு இல்லாமல் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வரும் கழிவுநீர் திறந்த வெளி யில் வெளியேரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குளம் போல் கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலையில், தற்போது பருமழை துவங்க உள்ளதால் சாலையில் பெருக்கெடுத்து, நோய் பரவுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற் கொண்டு கழிவுநீர் கால்வாய் மற்றும் பாதாள சாக் கடை திட்டத்தை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.