மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த ஏரியூர் ஒன்றியக்குழு உறுப்பினர் பி.அப்பாதுரை அவர்களின் படத்திறப்பு விழா திங்களன்று நடை பெற்றது.
இந்நிகழ்விற்கு ஏரியூர் ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.தங்கராஜ் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் வி.மாதன், பி.இளம்பரிதி, சோலை அர்ஜுனன், விஸ்வநாதன், ஏரியூர் ஒன்றியச் செயலாளர் என்.பி.முருகன், பென்னாகரம் பகுதிச் செயலாளர் கே.அன்பு, நகரச் செயலாளர் எஸ்.வெள்ளியங்கிரி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.