தருமபுரி, செப். 2- அ.பாப்பாரப்பட்டியில் தொடர்ந்து நிரம்பி வழியும் கழிவுநீர்க் கால்வாயால் அப்பகுதிப் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப் பட்டி பேரூராட்சிக்குட்பட்ட அ.பாப்பா ரப்பட்டி ஒன்றாவது வார்டிலுள்ள தெருக்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர், பாலக்கோடு மெயின் ரோட்டில் செல்லும் பிரதான கழிவுநீர் கால்வாயில் செல்லும். இந்த வடிகால் வழியாகத் தான் கழிவுநீர் வெளியேறி எட்டியாம்பட்டி ஏரிக்கு செல்கிறது.
கடந்த சில மாதங்களாக கழிவுநீர்க் கால்வாய் சுத்தம் செய்யப் படாமல் உள்ளதால், குப்பைக்கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் கால்வாயில் அடைத்து தேங்கி நிற்கிறது. இதனால் கழிவுநீர் வெளியேற முடியாமல் மழை நீரோடு சாலைக்கு வருவதால் நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி சுகா தாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
மேலும், தேங்கி நிற்கும் கழிவு நீர் துர்நாற்றம் வீசுவதால் அருகிலுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், தபால் நிலையம் மற்றும் கோவில் களுக்குச் செல்லும் பொதுமக்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்ற னர். எனவே கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர் கேடு ஏற்படுவதைத் தடுக்க தகுந்த நடவ டிக்கை எடுக்க வேண்டுமென அ.பாப் பரப்பட்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.