tamilnadu

img

இளம்பெண் மர்ம மரணம் - உறவினர்கள் தர்ணா

தருமபுரி அக்.14- காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறை‘யில் இறந்ததால், உடலை பெற மறுத்து அவரது உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம், முசி றியை சேர்ந்தவர் காஞ் சனா (20). இவர், தரும புரி மாவட்டம், சிக்கமா ரண்டஹள்ளியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துள்ளார். இதன்பின் தம்பதியினருக்கு கடந்தாண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில், காஞ்சனாவின் பெற்றோர் இவரிடம் பேச ஆரம்பித்துள்ளனர்.  இந்நிலையில், செவ்வாயன்று தீடீரென அவரது வீட்டின் அருகே வசிப்போர், காஞ்சனா இறந்து விட்டதாக வும், அவரது உடல் தருமபுரி அரசு மருத்துவமனையில் உள்ளதாகவும் அவரின் பெற்றோருக்கு தகவல் அளித் துள்ளனர். இதனால் பதற்றமடைந்த காஞ்சனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு சென்றனர். அப்போது, காஞ்சனாவின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் யாரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  இதனையடுத்து, தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர் கள் உடலை வாங்க மறுத்து தர்ணாவில் ஈடுபட்டனர். இத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி யளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.