tamilnadu

img

அரசு விழாக்களில் ஓரங்கட்டப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகள்

தருமபுரி, பிப்.16- அரசு விழாக்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஓரங்கட்டப்படுவதாக தருமபுரியில் குற்றச்சாட்டு எழுந் துள்ளது.  தருமபுரியில் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறு பான்மை மக்கள் உரிமை தின விழா நடைபெற்றது. இவ்விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு  நலத்திட்ட உதவிகளை வழங் கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி, மாவட்ட  வருவாய் அலுவலர் ரஹ்மத்துல்லா கான், தருமபுரி கோட்டாட்சியர் பொறுப்பு தேன்மொழி, சட்டமன்ற  உறுப்பினர்கள் சம்பத், கோவிந்த சாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதி கள் கூட்டுறவு சங்க தலைவர்கள்  விழா மேடையில் அமர்ந்திருந் தனர். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதாவிற்கு கோட்டாட்சியர் தேன்மொழிக்கு அருகாமையில் இடம் ஒதுக்கப்பட்டி ருந்தது.  ஆனால் கூட்டுறவு சங்க பிரதி நிதிகளாகப் பொறுப்பு வகிக்கும்  ஆளும்கட்சியின் டி.ஆர்.அன்பழகன், எஸ்.ஆர்.வெற்றி வேல், பூக்கடை ரவி மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் ஆறுமுகம் ஆகியோருக்கு அமைச்சருக்கு அருகாமையில் உள்ள வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. சட்ட மன்ற உறுப்பினர்கள் கோவிந்த சாமி மற்றும் சம்பத் ஆகியோரைக் காட்டிலும் அமைச்சருக்கு அருகா மையில் மேற்கண்ட தலைவர் களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. சட்டமன்ற  பிரதிநிதி களை காட்டிலும் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் என்ற பெயரில்  அரசு விழாக்களில் முன்னுரி மையும், முக்கியத்துவமும் அளிக் கப்படுகிறது.  இதுகுறித்து விழாவில் பங்கேற் றவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகள் கேள்வி எழுப்பினர். அதிலும் மாவட்ட அளவிலான உள்ளாட்சி தலைமை  பதவியில்  இருந்த பெண்கள் ஓரங்கட்டப் படுவது பெண்கள் மத்தியிலே வருத் தத்தை ஏற்படுத்தியுள்ளது.