tamilnadu

img

காலம்தாழ்த்தி வந்த ஜமாபந்தி அலுவலர்

தருமபுரி, ஜூன் 20- தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார் பில் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் ஜூன்  13 ஆம் தேதி முதல் ஜூன் 20 ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் ஜமாபந்தி நடை பெறுகிறது.  தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி ஆகிய 7 வட்டத்தில் உள்ள மொத்தம் 28 வருவாய் கிராமத்தில் முதல் கட்டமாக ஜூன் 13 ஆம் தேதியன்று 14 வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நிகழ்வு முடிவடைந்தது. இரண்டாம் கட்ட மாக ஜூன் 18 ஆம் தேதியன்று மீதமுள்ள  கிருஷ்ணாபுரம், புளுதிக்கரை, வெள்ளாளப் பட்டி, கோனங்கிநாய்யகன அள்ளி உள் ளிட்ட 14 வருவாய் கிராமங்களில் இருந்து மக்கள் கோரிக்கை மனுவுடன் தருமபுரி வட்டாட்சியர் அலுவலகம் வந்திருந்தனர். ஆனால், ஜாமபந்தி நடத்தும் அலுவலர் வரவில்லை. இதனால் மனுவுடன் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். முதியோர் உதவித்தொகை கேட்டு மனு கொடுக்க வந்த முதியோர்கள் மற்றும் கை குழந்தைகளு டன் வந்த பெண்கள் நீண்ட நேரம் காத் திருந்ததால் மிகுந்த சிரமத்துக்குள்ளா னார்கள். மேலும், ஜமாபந்தி நடக்கும் இடத்தில் குடிநீர் இல்லாமல் தவித்தனர். தருமபுரி வட்டாட்சியர் ராதகிருஷ்ணன், தனி வட்டாட்சியர்கள் மாரிமுத்து, பழனி யம்மாள் ஆகியோர் மாவட்ட அலுவலர் வரும்வரை காத்திருந்தனர். ஜாமாபந்தியில் மனுக்களை பெறும் மாவட்ட வழங்கல் அலுவலர் லட்சுமி மதியம் 12 மணிக்கு மேல் வந்தார். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள்.