தருமபுரி, அக். 4- புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டுமென தருமபுரியில் நடைபெற்ற பேரவை கூட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரி முத்து இல்லத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாவட்டத் துணைத் தலைவர் தமிழமுதன் தலைமை வகித்து பேசினார். இதில், மாநிலத் தலைவர் ஏ.டி. கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் தினேஷ், முன்னாள் மாவட்டத் தலைவர் ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து புதிய மாவட்டத் தலைவராக ஆடலரசு, மாவட்டச் செயலாளராக நா.தமிழமுதன், மாவட்ட துணைத் தலைவர்களாக பிரசாத், கலைஞன், மாவட்ட துணை செயலாளர்களாக பிரேம், தீனா உள்ளிட்ட 19 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, இக்கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும். மாணவர்க ளின் கல்வி உரிமையை, மருத்துவக் கல்வி உரிமையை மறுக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். விவசாயிக ளுக்கு எதிரான வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும். குழந்தைகள், மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.