தருமபுரி, அக்.6- தருமபுரி ஒன்றியத்தில் உள்ள சனத் குமார் நதி புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், வத்தல்மலையின் நீர் பிடிப்பு பகுதியான நல்லம்பள்ளி ஒன்றியம், தின்னஅள்ளி ஊராட்சியில் தொடங்கும் சனத்குமார் நதி தருமபுரி நக ராட்சி, தருமபுரி ஒன்றியம் வழியாக சுமார் 42.84 கிலோமீட்டர் தூரம் பயணித்து மொரப்பூர் ஒன்றியம் கெலவள்ளி ஊராட்சி கூடுதுறைப்பட்டியில் தென் பெண்ணையாற்றில் கலக்கிறது. இந் நதியின் பெரும்பகுதி புதர்கள் மண்டியும், ஆக்கிரமிப்புகளாலும் சூழப்பட்டுள்ளது. இந்த நதியின் வழித்தடங்களை கண்ட றிந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி அதை புனரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் விவசாயிகளும் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் தருமபுரி ஊராட்சி ஒன்றியம், கோணங்கி நாயக்கனஅள்ளி ஊராட்சி, செங்கல் மேட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி மதிப்பில் சனத்குமார் நதி புனரமைப்பு பணி துவக்க விழா நடைபெற்றது. இந் நிலையில் ஒருமாத காலமாகியும் பணிகள் தொடராமல் கிடப்பில் போட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி ஒன்றியச் செய லாளர் என்.கந்தசாமி கூறுகையில், சனத் குமார் நதியின் மூலம் தருமபுரி, நல்லம் பள்ளி,மொரப்பூர் ஆகிய ஒன்றியங்களில் பாசனத்திற்கும், குடிநீருக்காகவும் பயன் பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நதி யிலிருந்து பாசனத்திற்கு செல்லும் கால் வாய்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப் படவில்லை. இதனால் புதர்மண்டி காணப் படுகிறது. மேலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. கால்வாய் மூலம் நீர் செல் வதற்கு வழி இல்லாமல் உள்ளது. எனவே உடனடியாக தூர்வாரும்பணி நூறுநாள் வேலைதிட்டத்தின் மூலம் துவங்கி துரித மாக பணி முடிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார்.