tamilnadu

img

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பையர்நத்தம் கிராம மக்கள் மனு

தருமபுரி, பிப். 17- இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, பையர்நத் தம்   கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியி டம் திங்களன்று மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்பட்டி வட்டம்,  பையர் நத்தம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்  வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலை செய்து  வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இம்மக்களுக்கு சொந்த மாக வீடு ஏதுமில்லை. மேலும், வாடகை கொடுத்து வீட்டில் தங்கும் அளவிற்கு வசதியும் இல்லை. எனவே, தங்களுக்கு அரசால் வழங்கும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.