தருமபுரி பிப் -10, மத்திய பட்ஜெட்டில் ஐசிடி எஸ் திட்டத்திற்கு நிதிகுறைத் ததை கண்டித்து அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங் கத்தின் சார்பில் திங்களன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு 2020ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தொழிலாளர்களை யும், பொது மக்களையும் வஞ்சிக் கக்கூடிய வகையில் பட்ஜெட்டை உருவாக்கியுள்ளது. எல்ஐசி உள் ளிட்ட பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு விற்கவும், அங்கன்வாடி, சத்துணவு, ஆஷா போன்ற திட்டங்களுக்கு நிதியை குறைத்துள்ளது. மேலும், ஏழை மக்களின் வாழ்வாதாராமான நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு நிதி யும் குறைத்துள்ளது. குறிப்பாக, அங்கன்வாடி திட்டத்துக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 60 ஆயிரம் கோடி நிதியை குறைத்துள் ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பானது அங்கன்வாடி ஊழியர்களுக்கு அச்சத்தை யும், அதிருப்தியையும் ஏற்படுத்தி யுள்ளது. விலைவாசி உயர்வுக் கேற்ப நிதியை உயரத்துவதற்கு பதிலாக நிதியை குறைத்துள்ளது. இதனால், குழந்தைகள், கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியம், நல் வாழ்வு கேள்விக் குறியாகும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு அங்கன் வாடித் திட்டத்துக்கு நிதிகுறைத் ததை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தரு மபுரி பாலக்கோட்டில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கே. கலைவாணி தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.ஆறுமுகம் வாழ்த்தி பேசினார். இதில், மாவட்டத் தலைவர் ஏ.தெய்வானை மாவட்ட துணைத் தலைவர் டி.சுமதி, நிர்வா கிகள் செந்தாமரை, மலர்கொடி, சுசிலா, ராணி, ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றி னர்.
நல்லம்பள்ளி
இதேபோல், நல்லம்பள்ளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மங்கையர்கரசி தலைமை வகித்தார். தமிழ்நாடு சத் துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சி.காவேரி வாழ்த்தி பேசினார். இதில், மாவட்டச் செய லாளர் எம்.லில்லிபுஷ்பம், முன் னாள் மாநில தலைவர் சி.அங்கம் மாள், மாவட்ட துணைச் செயலா ளர் ராஜம்மாள், ஒன்றிய செயலா ளர் ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.