தருமபுரி, ஆக. 31- தின்னகுட்லான அள்ளி கிராமத்தில் சுடுகாட் டுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட நபர், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யவிடாமல் அராஜகத்தில் ஈடுபட்டதால், அப் பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள தின்னகுட்லான அள்ளியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக அக்கிராமத்தில் உள்ள சுடுகாட்டுப் பாதையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அப்பகுதி யைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டுப் பாதையை ஒட்டி யுள்ள நிலத்தை வாங்கி தோட்டம் அமைத்த துடன், அருகிலுள்ள சுடுகாட்டுப் பாதையையும் ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்துள்ளார்.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்தசவுடப்பன் என்பவர் உயிரிழந்த நிலையில், ஊர் பொதுமக்கள் சடலத்தை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் வழியில் ஆனந்தன் அதனை தடுத்து அடாவடி செய்துள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த பாலக்கோடு துணை காவல் கண்கா ணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட காவல் துறை யினர், வட்டாட்சியர் ராஜா ஆகியோர் பொதுமக் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஆக்கிர மிப்பு செய்த சுடுகாட்டுப் பாதையை மீட்டு பொது மக்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பொது மக்கள் சடலத்தை அடக்கம் செய்தனர்.