tamilnadu

img

ஒகேனக்கல்- வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள்

தமிழகத்தின் முக்கிய சுற் றுலா தளங்களில் ஒன்றான தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் லுக்கு தமிழகம் மற்றும் கர்நா டகா, கேரளா உள்ளிட்ட வெளி  மாநிலங்களில் இருந்து நாள்தோ றும் ஆயிரக்கணக்கான சுற்றுலா  பயணிகள் வருகை புரிகின்றனர்.  கோடை விடுமுறையின் முக்கிய  மாதங்களான ஏப்ரல், மே, ஜூன்   மாதங்களில் ஒகேனக்கலில் குவி யும் சுற்றுலா பயணிகள் அருவி யில் குளித்து பரிசலில் சென்றும், ஆற்றில் கிடைக்கும் மீன்களைப் பிடித்து சமைத்து சாப்பிட்டும் மகிழ்வர். இந்த கோடை நாட்க ளில் மட்டும் ஒகேனக்கல்  சுற்றுலா தளத்தில் பல லட்சம்  ரூபாய் அரசாங்கத்திற்கு வருமா னம் கிடைக்கப் பெறும். மேலும்,  அப்பகுதியை சுற்றியுள்ள தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்துவும் இந்த கோடை  காலம் பயன்பட்டு வந்தது.  

இந்த நிலையில் தற்பொழுது கொரோனா தடுப்பு நடவடிக்கை யாக ஒகேனக்கல் அருவிக்கு  செல்ல சுற்றுலா பயணிகளுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல்  சுற்றுலா தளத்தை மட்டுமே  நம்பி வாழ்ந்த பரிசல் ஓட்டிகள்,  மசாஜ் தொழிலாளர்கள், சமை யல் தொழிலாளர்கள் தற்பொ ழுது வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். இதுகுறித்து பரிசல் ஓட்டி கள் கூறுகையில், ஊட்டமலை  நாடார் கொட்டாய், ஒகேனக்கல்  என 6 கிராமங்களில் வசிக்கும்  மக்களுடைய முக்கிய தொழில் கள் பரிசல் இயக்குவது, சுற்றுலா  பயணிகளுக்கு மசாஜ் செய்வது  மற்றும் மீன் பிடித்தல் ஆகும்.  பரிசல் தொழிலை மட்டும்  நம்பி 416 பரிசல் ஓட்டிகள் உள்ளனர்.

எங்களுக்கு கோடை விடுமுறையான ஏப்ரல், மே, ஜூன்  மாதங்களில் மட்டுமே வருமானம் கிடைக்கும். இந்த மாதங்களில் வரும் வருமா னத்தை பெற்று தான் நாங்கள்  இதர காலங்களில் எங்களது குடும்பத்தை நடத்தி வருகிறோம். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் காலங்களில் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க தடை விதித்து விடு கிறது. இதனால் பாதி காலங் களில் நாங்கள் வேலை இழந்து இருக்க வேண்டிய சூழ்நிலை தான் உள்ளது. இத்தகைய நிலை யில் இவ்வாண்டு கோடை காலமும் கொரோனா ஊர டங்கால் வாழ்வாதாரத்தை முற்றி லும் இழந்துள்ளோம். தற்பொ ழுது அரசு கொண்டு வந்துள்ள  ஊரடங்கு உத்தரவை நாங்கள்  வரவேற்கிறோம். அதே நேரத் தில் பரிசல் இயக்குவதை மட்டும் நம்பியுள்ள பரிசல் ஓட்டிகளுக்கு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

 இதேபோல், ஒகேனக்கல் லில் மசாஜ் தொழிலாளர்கள்  200க்கும் மேற்பட்டோரும், மீன்பிடி தொழிலாளர்கள் 300 க்கும் மேற்பட்டோரும், சமையல் தொழிலாளர்கள் 700க்கும் மேற்பட்டோரும் வாழ்ந்து வருகின்றனர்.  மேலும் மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை நம்பி ஆயி ரக்கணக்கானோர் அன்றாட காட் சிகளாக வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய சூழலில் சுற்றுலா பயணிகளும் வராமலும், வியாபா ரமும் இல்லாமல், தங்களது வாழ் வாதாரத்தை மொத்தமாக இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு  அறிவித்துள்ள ரேசன் கார்டுக ளுக்கான ஆயிரம்ரூபாய் மற்றும்  அரிசி, பருப்பு மட்டுமே வழங்கப் பட்டுள்ளது.

மேலும், தங்களது  வாழ்வாதாரமே இந்த கோடை காலத்தை நம்பித்தான் உள்ளது. இதுவும், இந்த ஊரடங்கினால் முடிந்து போனதால் நாங்கள்  இந்த ஆண்டை எப்படி கடந்து செல்வது, வாழ்க்கையை எப்படி  நடத்துவது என்பதே கேள்விக்கு றியாகியுள்ளது என வியாபா ரிகளும், தொழிலாளர்களும் மிக வேதனையுடன் தெரிவித்தனர்.  எனவே, தண்ணீர் அதிகமாக  வரும் காலங்களில் வழங்கப்ப டும் நிவாரணத் தொகையுடன் இணைத்து ரூ.5 ஆயிரம்  அனைத்து தொழிலாளர்க ளுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.   ஆ . ஜீவானந்தம்