tamilnadu

ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தனி அலுவலகம் அமைத்திடுக சிபிஎம் கவுன்சிலர் வலியுறுத்தல்

தருமபுரி, ஜூன் 14- ஒன்றிய கவுன்சிலர்களுக்கு அவர்களது ஊராட்சியில் தனி அலுவலகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் வி.கோவிந்தசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலு வலர் வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, ஒன்றி யக்குழு தலைவர் உஷாராணி குமரேசன் தலைமை வகித் தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணபூரணி, அசோ கன் உள்ளிட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், காட்டேரி ஒன்றிய கவுன்சிலருமான வி.கோவிந்தசாமி பேசியதாவது, ஊத்தங் கரை ஓன்றியத்தில் 22 ஒன்றிய கவுன்சிலர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டு மக்கள் சேவை பணியில் உள்ளனர்.

மக் கள் சேவை அடிப்படைத் தேவைகள் குறித்து ஆலோசிக் கவோ, மக்களை சந்தித்து பேசவோ ஒன்றிய கவுன்சிலர்க ளுக்கு தனி அலுவலகம் இல்லை. இதனால், மக்கள் ஒன்றிய கவுன்சிலர்களிடம் தங்கள் குறைகளை சொல்ல சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, மக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக ஒன்றிய கவுன்சிலரை சந்திக்க அவரவர் ஊராட்சியில் பஞ்சாயத்து அலுவலகம் அருகே ஒன்றிய கவுன்சிலர்களுக்கு அலுவல கம் கட்டிதர வேண்டும் என வலியுறுத்தி பேசினார். மேலும், மனுவாகவும் ஒன்றியக்குழு தலைவரிடம் கொடுத்தார். இக்கோரிக்கை ஒருமனதாக ஆதரித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.