தருமபுரி, பிப்.13- அரூர் அருகே கொங்கவேம்பு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நிழற்கூடம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். அரூர்-ஊத்தங்கரை சாலையில் கொங்கவேம்புவில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார பகுதியில் உள்ள கூத்தாடிப்பட்டி, கொங்கவேம்பு, வேட்ரப்பட்டி, எஸ்.பட்டி, கருப்பிலிப்பட்டி, பழைய கொங்கம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளிலிருந்து தினந் தோறும் 200க்கும் மேற்பட்டோர் இங்கு சிகிச்சை பெற வரு கின்றனர். சிகிச்சைக்கு வருபவர்கள் பேருந்துக்காக மரத்தடியில் காத்திருக்க நேரிடுகிறது. இப்பகுதியில் குறிப் பிட்ட எண்ணிக்கையிலேயே நகர பேருந்துக்கள் இயக்கப் படுகிறது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அமர்வதற்கு கூட இடம் இல்லாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் பயணிகள் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.