tamilnadu

img

மின்சாரப் பாதுகாப்பு நாள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக. 19 - தேசிய மின்சாரப் பாதுகாப்பு நாளை யொட்டி அனைத்து மின்சாரவாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் தருமபுரி மின்வாரிய மேற்பார் வையாளர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. நிலக்கரிச் சுரங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. 2020 மின்சாரச் சட்டத்தை உடனடியாகக் கைவிட வேண் டும். எல்ஐசி, ராணுவத் தளவாடத் தொழிற் சாலை, ரயில்வே, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகள் ஆகிய வற்றைத் தனியார்மயமாக்கும் முயற்சி யைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் பி. ஜிவா தலைமை வகித்தார். இதில் எல்பிஎப் மாவட்டத் தலைவர்கள் சக்திவேல், வெங்கடேஷ், சண்முகராஜா, தொழிலாளர் பொறியாளர் ஐக்கியப் பேரவை மாவட்டத் தலைவர் வேடியப்பன், ஏஐசிசிடியு மின்வாரிய தொழிற்சங்க மாநிலத் தலைவர் முருகன், என்.எல்.ஒ மாவட்டத் தலைவர்கள் பிரபாகரன், தர்மலிங்கம் மற்றும் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டத் தலைவர் டி.லெனின் மகேந்திரன், துணைத்தலைவர் வெண்ணிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.