தருமபுரி, அக்.22- ஓசூர் - அதியமான் கோட்டை 4 வழிச்சாலைக்கு கையகப்படுத்தப் படும் நிலங்களுக்கான இழப் பீட்டுத் தொகை வேறுபாட்டை களைய வேண்டும் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். செந்தில்குமார் வலியுறுத்தியுள் ளார். தருமபுரி மாவட்டம், அருகே விருபாட்சிபுரத்தில், ஓசூர் - அதிய மான் கோட்டை 4 வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்படும் நில உரிமை யாளர்கள் மற்றும் அதிகாரிகளை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பி னர் எஸ்.செந்தில்குமார் சந்தித்து பேசினார். அப்போது, தருமபுரியில் இருந்து ஓசூருக்கு புதியதாக நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக் கப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி, இந்த வழித் தடத்தில் உள்ள 18 கிராமங்களில் நடைபெற்று வருகிறது. இதில், 11 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிக ளுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத் திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.50 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள ஏழு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இழப் பீட்டுத் தொகை வழங்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட் டுள்ள இழப்பீட்டுத் தொகையில் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது என தருமபுரி பகுதிலுள்ள விவ சாயிகள் குற்றஞ்சாட்டியுள்ள னர். ஒரே நில அளவை எண்ணில் ஒரு பகுதியில் சதுர அடிக்கு ரூ.16 என்றும்,மற்றொரு பகுதியில் சதுர அடிக்கு ரூ.1150 என நிர்ணயிக் கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய வேறுபாட்டை களைந்து நில உரிமையாளர்கள் கோருகின்ற இழப்பீடுத் தொகையை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.