தருமபுரி, பிப். 4- தருமபுரியில் மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்சார வாரியத்தை தனியார்மய மாக்கும் முயற்சியை கண்டித்து சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பினர் தருமபுரி மின்திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்டத் தலைவர் டி.லெனின் மகேந்தி ரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் பி.ஜீவா, பொருளாளர் ஜெயக்குமார் மாவட்ட நிர்வாகிகள் குப்பன், காளி யப்பன், குமரவேல் ஆகியோர் பேசினர். சிஐ டியு மாநிலக்குழு உறுப்பினர்.சி.கலாவதி, இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட இணை செயலாளர் ஏ.மாதேஸ்வரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மேலும், பீகார் மாநில மின்சார வாரி யத்தை தனியார்மயமாக்குவதை கண்டித்து பாட்னாவில் போராடிய மின்வாரிய தொழி லாளர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்தும், மத்திய பட்ஜெட்டில் எல்ஐசி தனியார்மயமாக்கும் அறிவிப்பை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.