tamilnadu

நான்கு போலீசாருக்கு கொரோனா- மொரப்பூர் காவல்நிலையம் மூடல்

தருமபுரி ஜூலை -9, தருமபுரி, மொரப்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் நான்கு காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய் யப்பட்டதால், காவல்நிலையம் மூடப்பட்டது. தருமபுரி மாவட்டம், மொரப்பூர் காவல்நிலையத்தில்  பணியாற்றும் காவலர்களுக்கு அண்மையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதில், ஒரு ஆண், மூன்று பெண் காவலர்கள் உட்பட நான்கு பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள், தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டனர்.

மேலும், காவல்நிலையம்  மூடப்பட்டு அதைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக் கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்களுடன் தொடர் பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட் படுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

;