tamilnadu

img

தோழர் எம்.ராஜேந்திரன் படத்திறப்பு

தருமபுரி, டிச. 1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்த தோழர் எம்.ராஜேந் திரன் படத்திறப்பு விழா ஞாயிறன்று தரு மபுரியில் நடைபெற்றது.  தருமபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராகவும், சிஐடியு மாவட்ட துணைத் தலைவராக வும், ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டு வந்த தோழர் எம்.ராஜேந்திரன் நவம்பர்  4ஆம் தேதியன்று காலமானார். அன்னாரின் படத்திறப்பு, நினைவேந்தல் கூட்டம் தருமபுரி ஒட்டப்பட்டி சமுதாய கூடத்தில் நல்லம்பள்ளி ஒன்றியச்செயலாளர் கே.குப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டகுழு உறுப்பினர் பி.மாதேஸ் வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தோழர் எம்.ராஜேந்திரனின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது, தோழர் எம்.ராஜேந்திரன் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராட மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்தியாவில் சோசலிசம் மலரவேண்டும் என்ற எண்ணத் தோடு திறம்பட பணியாற்றியவர்.  மத்திய, மாநில அரசுகள் தொழிலா ளர்களின் உரிமைகளை மறுத்து வருகிறது. மேலும் தொழிலாளர் நலச்சட்டத்தை அமலாக்க மறுக்கிறது. இச்சூழலில் தோழர் ராஜேந்திரன் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இவர் செய்த கட்சி, தொழிற்சங்க பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என கூறினார். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் ஏ.குமார், சிஐடியு மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.நாகராசன், கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் பி.இளம்பரிதி, எம்.மாரிமுத்து, எம்.முத்து, எஸ்.கிரைஸாமேரி, இரா.சிசுபாலன், சோ.அருச்சுணன்,  டி.எஸ்.ராமச்சந்திரன், வே.விசுவநாதன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர்.