tamilnadu

img

தோழர் ஆறுமுகத்தின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

பென்னாகரம், அக். 26-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தருமபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளருமான மறைந்த தோழர் ஆறுமுகத்தின் முத லாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது.  தருமபுரி மாவட்டம், பென்னாக ரம் பேருந்து நிலையத்தில் வைக்கப் பட்டிருந்த தோழர் ஆறுமுகத்தின் திருவுருவப் படத்திற்கு மாலை அணி விக்கப்பட்டு, முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி ஊர்வலம் தொடங் கியது. சுமார்  2 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள மடம் - காவேரி ரோடு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நினைவு மண்டபம் வரை சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வல மாக சென்றனர். இதனைத்தொடர்ந்து தோழர் ஆறுமுகத்தின் நினைவிடத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில குழு உறுப்பினர் டி.ரவீந்தி ரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணை தலைவர் பி.டில்லி பாபு மற்றும் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார் மற்றும்  குடும்ப உறுப்பினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு பொதுமக்கள் மலர் தூவி அஞ் சலி செலுத்தினர்.  இதையடுத்து நடைபெற்ற நினை வேந்தல் நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் மாதம் தலைமை வகித் தார். இதில் மாநிலகுழு உறுப்பினர் இளம்பரிதி, மாரிமுத்து, மலையன், சோலை அர்ஜுனன், சிசுபாலன், விஸ் வநாதன், முத்து மற்றும் மாதர் சங்க மாவட்ட செயலாளர் கிரிஷா மேரி உள் ளிட்டோர் கள் நினைவேந்தல் உரை யாற்றினர். நிகழ்ச்சியில் பகுதி குழு செயலாளர் அன்பு, சின்னம் பள்ளி பகுதி குழு செயலாளர் சக்திவேல், ஏரி யூர் ஒன்றிய செயலாளர் முருகன், பாப் பாரப்பட்டி பகுதி குழு செயலாளர் சின்னசாமி, நகர செயலாளர் வெள்ளி யங்கிரி மற்றும் மாவட்ட குழு உறுப்பி னர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.