tamilnadu

img

ஊதிய உயர்வை முறையாக அமல்படுத்துக துப்புரவு பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

பென்னாகரம், ஜூன் 4- தருமபுரி மாவட்ட ஆட்சியர் உத் தரவிட்ட படி ஊதிய உயர்வை முறை யாக வழங்க வேண்டும் என வலியு றுத்தி பென்னாகரம் பேரூராட்சி யில் துப்புரவு பணியாளர்கள் வியா ழனன்று காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் பணியாற்றக்கூடிய தினக்கூலி துப் புரவு பணியாளர்களுக்கு நாளொ ன்றுக்கு ரூ.320 வழங்க வேண்டு மென கடந்த செப்டம்பர் மாதம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர் விழி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் தருமபுரி மாவட்டத் தில் உள்ள பெரும்பாலான பேரூ ராட்சிகளில் இது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் பென்னாகரம் பேரூராட்சி துப்புரவு  பணியாளர்களுக்கு இதுவரை  அறிவித்த தொகை வழங்கப்ப டவில்லை. இதுகுறித்து பலமுறை  பேரூராட்சி செயலர் மற்றும் உதவி  இயக்குனர் ஆகியோரிடம் முறை யிட்டும் தற்போது வரை எந்த வொரு நடவடிக்கையும் மேற்கொள் ளவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட தொகை யினை உடனடியாக வழங்க வேண் டுமென வலியுறுத்தி பென்னாகரம் பேரூராட்சியில் பணியாற்றும் துப்பு ரவு பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர்  

மேலும், பென்னாகரம் பேரூ ராட்சியின் செயல் அலுவலர் துப்பு ரவு பணியாளர்களை தகாத வார்த் தைகளால் தொடர்ந்து பேசி வருவ தாகவும், இது குறித்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும், துப்புரவு பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தடங்களை வழங்க வேண் டும் எனவும் கோரிக்கை பதாகை களை ஏந்தினர். இந்த போராட்டத்தில் தருமபுரி மாவட்ட ஊரக உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்வம் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ராஜு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பி.எம்.முருகேசன், நகர செயலாளர் வெள்ளியங்கிரி, நகர குழு உறுப்பினர் வெங்கடாஜலம், மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.