தருமபுரி, ஆக.17- பள்ளி கல்வித்துறை, குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்ட மைப்பு மற்றும் விஐபி தொண்டு நிறுவனம் இணைந்து அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் தருமபுரி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் சனியன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் தலைமை வகித்தார். விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி ஏ.பரம ராஜ் கலந்து கொண்டு பேசுகையில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தை களை பாதுகாக்க 2012-ஆம் ஆண்டு போக்சோ சட்டம் உருவாக்கப்பட்டது. பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாலியல் வன்முறை, சீண்டல் நடந்தால் தலைமை யாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உரிய அதி காரிகளிடம், காவல்துறையினரிடம் அல்லது குழந்தைகள் உதவி மைய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதில் பாலியல் சீண்டல் சம்பவத்தை மூடி மறைக்க முயன்றால் ஆசிரியரும் குற்ற வாளியாக கருதப்படுவார்கள். மேலும் குழந்தைக்கு எதிரான பாலியல் தாக்குதலில் பெண் குழந்தைகள் மட்டு மல்லாது ஆண் குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த தாக்குதல் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், குழந்தைகள் பராமரிப்பு செய்யக் கூடிய வர்கள், கல்வி, மத நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள், காவல்துறை, விளையாட்டு பயிற்சியாளர்கள் ஆகியவர்களின் மூலம் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. குழந்தைகளை பாலியல் தாக்குதல் செய் தால் கடும் தண்டனை வழங்கப்படும். இந்த போக்சோ சட்டத்தின் மூலம் 2012ஆம் ஆண்டிலிருந்து தருமபுரி மாவட்டத்தில் சுமார் 230 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கருத்தரங்கில் மாவட்டம் முழுவ திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங் கேற்றனர். இதனை தொடர்ந்து அரசு நடு நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசியர்களுக்கும், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத் தரங்கம் நடைபெற உள்ளது. இக்கருத்த ரங்கில் குழந்தைகள் மீதான வன் முறைக்கு எதிரான கூட்டமைப்பு மண்டல ஒருங்கிணைப்பாளர் கே.பி.செந்தில்ராஜா வரவேற்றார். கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜி.ராகோத்தமன், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்ட மைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கா. கணேசன், மாவட்ட சமூக நல அலுவலர் பி.கே.கீதா, மாவட்ட குழந்தைகள் பாது காப்பு நல அலுவலர் எம்.சிவகாந்தி, குழந்தைகள் நல குழுமத் தலைவர் டி. சரவணன், வழக்கறிஞர் எஸ்.ரவி, தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் இரா. சுரேஷ், மன நல மருத்துவர் ஆர்.கற்பகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறை வாக விஐபி தொண்டு நிறுவன நிர் வாகி சரளா செந்தில்குமார் நன்றி கூறி னார்.