தருமபுரி, பிப்.12- நல்லம்பள்ளி அருகே விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைப்பதால் இழப்பீடு வழங்கக் கோரி புதனன்று விவசாயி உயர் மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி அடுத்துள்ள சோமனஅள்ளி அருகே கோரபள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி சின்னசாமி. இவரின் விவசாய நிலத்தின் வழி யாக உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு இழப்பீடு வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை சின்னசாமி மனு கொடுத்துள்ளார். ஆனால் இதுவரையில் எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை. மேலும் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இதனால் மனமுடைந்த சின்ன சாமி புதனன்று காலை உயர்மின் கோபுரத்தின் மீது மண்ணெண் ணெய் கேனுடன் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகவலறிந்த தருமபுரி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னசாமியிடம் பேச்சு வார்த்தை நடத்தி கீழே இறங்கி வந்தார்.