tamilnadu

img

நிலத்தை அபகரிக்க முயற்சி- ஆட்சியரிடம் புகார்

தருமபுரி, மார்ச் 21- நிலத்தை அபகரிக்க முயற்சிக் கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர் தருமபுரி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சி யரிடம் மனு கொடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வாணியர் தெருவைச் சேர்ந்த வர் ராமலிங்கம் செட்டி. இவரது மனைவி ஜெயந்தி. இத்தம்பதியி னர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரி டம் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது, எங்களுக்கு சொந்தமாக (சர்வே எண் 89) 2.47 ஏக்கர் நிலம் உள்ளது. பரம்பரை சொத்து என்ப தால் விவசாயம் செய்து வருகி றோம். இந்நிலையில் பென்னா கரம் வட்டம் தின்னப்பட்டி கிரா மத்தைச் சேர்ந்த குப்பாகவுண்டர் மற்றும் முனியப்பன் ஆகியோர் எங்கள் நிலத்தை அபகரிக்க முயற் சித்து வருகின்றனர். இந்நிலையில் மார்ச் 11ஆம் தேதியன்று எங்கள் சகோதரர் சுப் பிரமணி நிலத்தில் புதிய வீடு கட்டு வதற்கு பழைய குடிசை வீட்டை அப்புறப்படுத்தியுள்ளார். அப் போது முனியப்பன் அடியாட்களு டன் வந்து சுப்பிரமணியை தாக்கி னார். மேலும், இந்த நிலத்தை எங்களுக்கு கொடுத்துவிடுங்கள் இல்லை என்றால் உங்கள் குடும் பத்தை உயிருடன் விடமாட்டோம் என மிரட்டியுள்ளனர். தாக்குத லில் காயமடைந்த சுப்பிர மணி பென்னாகரம் காவல்நிலை யத்தில் புகார் மனு செய்தார்.  இந்நிலையில், மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சுப்பிரமணி மீது ஆளும்கட்சியைச் சேர்ந்த முனியப்பனின் தூண்டுதலின் பேரில் பொய்வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். நிலத்தை அபகரிக்க முயற்சி செய்து தாக்குதல் நடத்திய முனி யப்பன் மீது நடவடிக்கை எடுப் பதற்குப் பதிலாக காவல்துறை பாதிக்கப்பட்டவரை கைது செய் துள்ளது. மேலும் முனியப்பன் கூலிப்படையை வைத்து எங்கள் வீட்டில் உள்ள பெண்களை நிலத்தை கொடுக்கச் சொல்லி மிரட்டுகிறார். இதனால் எங்கள் குடும்பம் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் அஞ்சி பயந்து வாழும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது. ஆகவே, எங்கள் சொத்தை அப கரிக்கும் முயற்சியில் ஈடுபடும் முனியப்பன், குப்பாகவுண்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுப்பிரமணி மீது பதியப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். மேலும், எங்கள் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.