தருமபுரி, செப்.1- காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவல கத்தில் குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லாத தால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வரு கின்றனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் பல ஆண்டுகளாக பயணியர் மாளிகையில் செயல்பட்டு வந்த தாலுகா அலுவலகம், கயிறுக்காரன் கொட்டாய் அருகே புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப் பட்டது. காரிமங்கலம் நகரிலிருந்து இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந் துள்ள இக்கட்டிடத்தை கடந்தாண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பொது மக்கள் சென்று வர போதிய பேருந்து வசதிகள் இல்லை. மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிநீர் வசதிகள் இன்றி உள்ளன. மேலும் வட்டாட்சியர் அலுவ லகத்தில் கட்டப்பட்ட கழிப்பிடம் பயன் பாடின்றி பூட்டியே உள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வரு கின்றனர். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.