tamilnadu

img

அடிப்படை வசதிகள் இன்றி இயங்கும் திருக்கடையூர் நூலகம் 

 தரங்கம்பாடி, செப்.2- நாகை மாவட்டம் திருக்கடையூரில் பொது நூலகத் துறையின் கீழ் கடந்த 1970-ம் ஆண்டு நூலகம் அமைக்கப் பட்டது. ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து வாடகை கட்டிடத்தி லேயே இயங்கி வருகிற இங்கு வரலாறு, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த 27,503 நூல்கள் உள்ளன. இங்கு சுற்றுப்புற டி.மணல்மேடு, பிள்ளை பெருமாநல்லூர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 3 பேர் வாசகர்களாக உள்ளனர். நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் இங்கு வருகின்றனர்.  இதில் போதிய இட வசதியின்றி உள்ள நூலகத்திற்கு சொந்தமாக கட்டிடம் கட்ட வேண்டுமென பல்வேறு தரப்பின ரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த 2015-ல் ஊராட்சியில் மேலவீதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் நூலகம் கட்டுவதற்கு அனுமதியளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலை நூலகத் துறையிடம் அளித்தும் இதுவரை புதிய கட்டிடம் கட்டுவதற்கான எந்த ஒரு நட வடிக்கையும் சம்பந்தப்பட்ட துறையினர் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அடிப்படை வசதிகள் இன்றி தொடர்ந்து 49 ஆண்டு களாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் நூலகம் 50-ஆவது ஆண்டை தொடங்குவதற்கு முன்னதாக சொந்த கட்டிடத்தில் இயங்க நூலகத் துறை நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.